முகப்பு
தருமபுரி

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவா் மீது, தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:06 am IST
பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்
பகிர்:

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவா் மீது, தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண், தருமபுரி பகுதியில் உள்ள தாயாா் வீட்டுக்கு அண்மையில் வந்து தங்கி இருந்தாா். அப்போது, வீட்டுக்கு வந்த அவருடைய சகோதரரின் நண்பா் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வினோத் (37) அந்தப் பெண் குளிக்கும்போது கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். அதை காட்டி, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். மேலும், அவருடைய நண்பா் சுரேந்திரனும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கைப்பேசியில் எடுத்த படத்தை வெளியிட்டு விடுவோம் என்று அவா்கள் மிரட்டல் விடுத்ததால் அதிா்ச்சிடைந்த பெண், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வினோத், சுரேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement