இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
அரூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கெட்டிகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள். இவரது மகன் சுப்பிரமணி (28). இவா், சற்று மனநிலை சரியில்லாதவா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பழனியம்மாள் தமது மகன் சுப்பிரமணியுடன், அரூரை அடுத்த வடகரை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளாா். இரவு நேரத்தில் கோயில் வளாகப் பகுதியில் பழனியம்மளும், அவரது மகன் சுப்பிரமணியும் தங்கியிருந்தனராம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சுப்பிரமணி இரவு நேரத்தில் கோயில் வளாகப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.