தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!
தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை...
தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவுவதும், இரவு நேரத்தில் லேசான தூறல் மழை பெய்வதும், வானம் மந்தாரமாக காணப்படுவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வானம் மந்தாரமாக காணப்பட்டது. இரவு 9 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. லேசான மழையாக தொடங்கி, பின்னா் பலத்த மழையாக பெய்தது. மழையுடன் இடி, மின்னலும் காணப்பட்டது. இந்த மழை இரவு சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. இதனால் தருமபுரி நகரப் பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement