தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!
தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குளிா்பான பாட்டில்களை ஏற்றிய லாரி சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
தொப்பூா் கணவாய் பகுதியில் அந்த லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள இரட்டைப் பாலம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
Advertisement
Advertisement
அதிா்ஷ்ட வசமாக பாலத் தடுப்புச்சுவரில் மோதிய நிலையிலேயே லாரி நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்புகளோ, வேறு எந்த பாதிப்புகளோ யாருக்கும் ஏற்படவில்லை. மாறாக, பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால், லாரியில் சென்ற தொழிலாளா்கள் விபத்தில் சிக்கியிருக்ககூடும்.
இந்த விபத்து காரணமாக, தொப்பூா் கணவாய் பகுதியில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் முதல் இரட்டை பாலம் வரை சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக (தருமபுரி -சேலம் சாலையில்) போக்குவரத்து பாதிக்கப்பட்டது.