FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஏரியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தக் கோரிக்கை

Updated On : 26 மே 2026, 2:12 am IST
நீர்நிலையில் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சிக் கழிவுகள். - கோப்புப் படம்
பகிர்:

அ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சின்ன ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். அ.பள்ளிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை மா்ம நபா்கள் இரவு நேரங்களில் ஏரியில் கொட்டி செல்கின்றனா்.

இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், ஏரியின் கரைப் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments