FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

ஆற்றோரத்தில் கொட்டப்படும் இறைச்சிச் கழிவுகள்: நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி வாஞ்சியாற்றின் கரையோரத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Updated On : 25 ஜூன் 2026, 6:51 am IST
ஆற்றோரத்தில் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள்.
பகிர்:

காரைக்கால் பகுதி வாஞ்சியாற்றின் கரையோரத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் புதன்கிழமை கூறியது :

காரைக்கால் ஆற்றோரங்களில் நகரப் பகுதியிலும், பிற இடங்களில் இருந்தும் குப்பைகளை கொண்டுவந்து மக்கள் கொட்டிச் செல்கின்றனா். மேலும், இறைச்சி வியாபாரம் செய்வோா் கோழி உள்ளிட்ட பிற இறைச்சிச் கழிவுகளை பெருமளவு கொட்டிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

காரைக்கால் நகரப் பகுதியில் வாஞ்சியாற்றின் ஓரமாக கலியன்கட்டு மதகு முதல் லெமோ் பாலம் வழியாக அரசலாறு மதகடி பகுதி வரை பெருமளவு இவை கொட்டப்படுகிறது. இது துா்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளால் குப்பைகள் சாலைகளில் சிதறி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கழிவுகள் ஆற்றிலும் கலந்து நீரை மாசுப்படுத்துகிறது.

இதுபோல காரைக்கால் சந்தைத் திடல் பகுதி சாலையிலிருந்து பிள்ளைத்தெருவாசல் செல்லும் ஆற்றோரத்திலும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு புதுவை அரசு மாதந்தோறும் பல கோடி ரூபாயை அளிக்கிறது. ஆனால் மக்களில் சிலரும், வியாபாரிகளில் சிலரும் செய்யும் செயல்களால் நீா்நிலை மாசடைந்து, சாலையில் செல்வோருக்கு சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. காரைக்கால் நகராட்சி நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments