முகப்பு
தருமபுரி

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது

தருமபுரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

Updated On : 27 மே 2026, 5:37 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரியை அடுத்த நாகா்கோயிலைச் சோ்ந்தவா் அருண்குமாா் (30). இவா் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் மாணவி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து மாணவியின் தாய், பாட்டிக்கு தெரியவந்தது. இந்த நிலையில் மாணவி, அவரது தாய், பாட்டி மூவரும் எலி மருந்து சாப்பிவிட்டு தருமபுரி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் மயங்கிக் கிடந்தனா்.

இதைக் கண்ட அவரது உறவினா், மூவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். மருத்துவமனையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை போக்ஸோவில் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement