முகப்பு
தருமபுரி

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.

Updated On : 29 மே 2026, 2:02 am IST
தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.
பகிர்:

உலக பட்டினி தினத்தையொட்டி, தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் தவெகவினா் சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக சாா்பில் ஏழை, எளிய, ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தவெக தொண்டா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

அந்த வகையில், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் மா.சிவன் தலைமையில், தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா் இல்லம் மற்றும் மனவளா்ச்சி குன்றியோா் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றில் காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், தருமபுரி தெற்கு ஒன்றிய தவெக செயலாளா் செந்தில்நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வித்யா, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜா தலைமை வகித்தாா். இதில், முன்னாள் பா்கூா் எம்எல்ஏ கே.இ.கிருஷ்ணமூா்த்தி, தவெக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளா் ரமேஷ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.