இரு ஒன்றியங்களுக்குப் பாராட்டு
சுதந்திர தின விழாவில் அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் பணிகளைப் பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
சுதந்திர தின விழாவில் அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் பணிகளைப் பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
அரூர், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகள் வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. அமரவேல், பி.கே. மகாலிங்கம், உதவிப் பொறியாளர்கள் ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி.துரைசாமி, பணி மேற்பார்வையாளர்கள் ஆர். அன்பழகன், கே. இன்பசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.மணி, ஆர்.ஜெயமாலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.செல்வன், கே.பாரதி, உதவியாளர்கள் சி.சஞ்சீவன், கு. சேட்டு, ஊராட்சிச் செயலர்கள் என். கோவிந்தன் (கீழ் மொரப்பூர்), கே. பரசுராமன் (சில்லாரஹள்ளி) ஆகியோருக்கு தருமபுரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.