அரசுப் பள்ளிகளுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் அனுப்பிவைப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தருமபுரி ஊராட்சியில் உள்ள தொடக்க, நடுநிலை என 136 பள்ளிகளுக்கு பாடப் புத்ககங்கள் அனுப்பும் பணி, தருமபுரி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பணியை வட்டார கல்வி அலுவலர் நடராஜன் பார்வையிட்டார். ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் பள்ளி திறக்க உள்ள நிலையில் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 8,600 மாணவர்கள் பயன் பெறுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.