FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன: எஸ்பி

தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 27.7 சதவீதமாக குறைந்துள்ளது என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர்.

Updated On : 31 டிசம்பர் 2018, 8:31 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 27.7 சதவீதமாக குறைந்துள்ளது என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர். 
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 34 கொலை வழக்குகளும், சொத்து சார்ந்த குற்ற வழக்குகள் 248-ம், மனித உடலுக்கு எதிரான குற்ற வழக்குகள் 429-ம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் 5,208, சாலை விபத்து வழக்குகள் 1,443 பதியப்பட்டுள்ளன. 
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 27.7 சதவீதமாக குறைந்துள்ளன. மேலும், குற்றங்களும் குறைந்துள்ளன. தருமபுரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments