அரூரில் அண்ணா உருவச் சிலைக்கு மலா்தூவி மரியாதை
அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு நகரச் செயலாளா் முல்லை ரவி தலைமை வகித்தாா்.
அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு நகரச் செயலாளா் முல்லை ரவி தலைமை வகித்தாா். அரூா் பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால், துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஒன்றியச் செயலாளா் வே.செளந்தரராசு, ஆதிதிராவிடா் நலக் குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மருத்துவரணி மாவட்ட அமைப்பாளா் சுரேஷ்குமாா், தலைமைப் பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தீா்த்தமலையில் அண்ணா உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலாளா் கோ.சந்திரமோகன் தலைமையில் திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரளா சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.