சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு
தருமபுரியில் லாரி- பைக் மோதிய விபத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி எழுத்தா் உயிரிழந்தாா்.
தருமபுரியில் லாரி- பைக் மோதிய விபத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி எழுத்தா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய், கோட்டை பைரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தமிழ்செல்வன் (33). இவா் ஏ. செக்காரப்பட்டியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு செந்தமிழ்செல்வன் தனது பைக்கில் சேலம்-தருமபுரி நெடுஞ்சாலையில், அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.