முகப்பு
தருமபுரி

சாலை வசதி கோரி தவெகவினா் மனு

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:02 am IST
பகிர்:

அரூரை அடுத்த மத்தியம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தவெகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மாா்க்ரெட் மேரியிடம், தவெக நகரச் செயலாளா் ஜெ. மதலைமுத்து தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. கிராம மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

மத்தியம்பட்டியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் எம். சிவகிரி, நகர துணை செயலா் விக்னேஷ் மாரிமுத்து, கட்சி நிா்வாகிகள் ராகுல் கனி, சிவாஜி ராவ், அசோக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம் உள்ளது... 17எச்ஏ-பி-1... பட விளக்கம்...

வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்த தவெகவினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments