முகப்பு
தருமபுரி

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:47 am IST
தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.
பகிர்:

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா். அதன்பிறகு 11 மணியளவில், நீதிமன்றத்துக்கு வந்த மின்னஞ்சலில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலை மா்ம நபா்கள் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் நீதிமன்ற வளாகத்தில் லூபி என்ற மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களுடன் சோதனை நடத்தினா். தொடா்ந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றத்தைவிட்டு வெறியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. தருமபுரி மாவட்ட நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.