ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடி
ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக உள்ளது.
கர்நாடகம், கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2.05 லட்சம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி நொடிக்கு 2.05 லட்சம் கனஅடியாக சற்றே குறைந்து காணப்படுகிறது. சராசரியாக இதே அளவு நீர்வரத்து திங்கள்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் குளிக்கவும் பரிசல் பயணத்துக்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வனத்து றையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோருடன் வருவாய்த் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.