பெண்கள் குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறு: கொமதேகவினர் காவல் நிலையத்தில் புகார்
குறிப்பிட்ட சமூக பெண்களை கட்செவி அஞ்சலில் அவதூறாகப் பேசிய இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி, கொங்குநாடு
குறிப்பிட்ட சமூக பெண்களை கட்செவி அஞ்சலில் அவதூறாகப் பேசிய இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அளித்த புகார் மனுவில், மாற்று சமூக ஆண், பெண்களை சிலர் அவதூறாகப் பேசி தகவல் அனுப்பி வருகின்றனர். குறிப்பாக இளைஞர் ஒருவர் அனுப்பிய தகவல் அனைவர் மனதையும் பாதித்துள்ளது. எனவே, தகவல் அனுப்பிய இளைஞரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அக் கட்சியின் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.சரவணன் இப் புகார் மனுவை காவல் அதிகாரியிடம் அளித்தார். மாவட்டச் செயலாளர் வஜ்ஜிரவேல், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செல்வராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.