FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பாஜக வலியுறுத்தல்

Updated On : 11 ஜூலை 2024, 3:42 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி போன்ற பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.எஸ்.ஜி.சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மா மகசூல் குறைந்ததால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் கூட்டணி அமைத்து, மா விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை தர மறுக்கிறாா்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments