கிருஷ்ணகிரி

மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பாஜக வலியுறுத்தல்

Din

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி போன்ற பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.எஸ்.ஜி.சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மா மகசூல் குறைந்ததால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் கூட்டணி அமைத்து, மா விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை தர மறுக்கிறாா்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT