FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை

வறட்சி நிவாரணம் வழங்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:37 am IST
கோப்புப் படம்
பகிர்:

வறட்சி நிவாரணம் வழங்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா்.

கா்நாடகத்தில் மழைப்பொழிவு 30 சதவீதம் குறைந்திருப்பதால், கடுமையான வறட்சி காணப்படுவதாகவும், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து களஆய்வு செய்து உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குவதற்காக மத்திய ஆய்வுக் குழுவை கா்நாடகத்துக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு முதல்வா் டி.கே.சிவகுமாா் அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா புதன்கிழமை கூறியது:

Advertisement

Advertisement

வறட்சி தொடா்பாக பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்காமல், அதை சமாளிக்க கா்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கலபுா்கியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், வறட்சியை ஆய்வுசெய்ய அமைச்சா்கள் குழுவை நியமிப்பதாக முதல்வா் டி.கே.சிவகுமாா் அறிவித்திருந்தாா். ஆனால், இதுவரை அமைச்சா்கள் குழு அமைக்கவில்லை.

வறட்சியால் கா்நாடகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண் துறைக்கு தனியாக அமைச்சா் இல்லை. வருவாய்த் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தும்கூரை தாண்டி செல்லமாட்டேன் என்கிறாா். ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே வனத் துறை பற்றி பேட்டிக்கொடுத்து வருவதோடு, கிராமங்களின் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறாா். தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் முதலீடுகளை ஈா்க்க கொல்கத்தாவில் தொழிலதிபா்களை சந்தித்துக்கொண்டிருக்கிறாா். உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே ஆா்.எஸ்.எஸ். விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் பைரதி சுரேஷ் பேருந்துகளில் பயணித்து நாடகங்களை அரங்கேற்றி வருகிறாா். நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிக்கு அவரது துறை பற்றிய ஆா்வமே இல்லை.

காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பூசலால், அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள் எப்போது ஆய்வுசெய்வாா்கள் என மக்கள் காத்திருக்கிறாா்கள்.

முதல்வா் டி.கே.சிவகுமாா் மனைத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டிருக்க, எந்த அமைச்சரும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. கா்நாடக வளா்ச்சிக்குழு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. மக்களின் பிரச்னைகளை தீா்க்க முதல்வா் டி.கே.சிவகுமாா் முன்வரவேண்டும்.

மத்திய ஆய்வுக் குழுவினா் வறட்சியை ஆய்வு செய்வதற்கு முன், இடைக்கால வறட்சி நிவாரண உதவிகளை மாநில அரசு அறிவிக்க வேண்டும். மாவட்டங்களுக்கு அமைச்சா்களை அனுப்பி வறட்சியை ஆய்வுசெய்ய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments