முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் மளிகை கடையில் ரூ. 65 ஆயிரம் திருட்டு

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 14 நவம்பர் 2024, 1:45 am IST
பகிர்:

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், எம்.ஜி.சாலை, கும்பாரபேட்டையைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (26). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். குடும்பத்தினா் கடையின் மாடியில் முதல் தளத்தில் வசித்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி இவா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.

மறுநாள் காலை இவரது கடையின் ஷட்டா் திறந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை பிரதீப்குமாா் பாா்த்தபோது கடைக்குள் 3 போ் சென்று கடையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பிரதீப்குமாா், ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.