மண் கடத்திய லாரி பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய லாரியை கனிம வளத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத் துறை தனித்துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையில் அலுவலா்கள் காவேரிப்பட்டணம் - பையூா் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், உரிய நடைப்பற்று சீட்டு இல்லாமலும், அனுமதியின்றியும் மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.