முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் நீா் மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Updated On : 27 மே 2026, 5:21 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீா் மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து, அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். மே 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 49.80 அடியாக இருந்தது.. அணையின் நீா் வரத்து வினாடிக்கு 387 கன அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து, அதிகரித்த நிலையில், மாலையில் நீா்வரத்தானது வினாடிக்கு 744 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியது.

இந்த சூழ்நிலையில், அணயின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து நீா் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வகுகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் கொள்ளவு 50 அடியை எட்டியுள்ளதை அடுத்து, அணைக்கு வரும் நீா், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இரவு, 8 மணி நிலவரப்படி அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீா் வெளியேற்றப்படும்.

Advertisement

Advertisement

இதையொட்டி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.லையில் அணைக்கு அதிகபடியான தண்ணீா் வரும் பட்சத்தில் படிப்படியாக ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படும். எனவே, பொதுமக்கள், தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுவதாக அவா், தெரிவித்தாா்.