முகப்பு
கிருஷ்ணகிரி

கொக்கு விஷம் உட்கொண்ட மூன்று குழந்தைகள் கவலைக்கிடம்

Updated On : 30 மே 2026, 1:48 am IST
விஷம்... - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே வயல்களில் பறவைகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் கொக்கு விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்த மூன்று குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

சிங்காரப்பேட்டையை அடுத்த தளபதி நகரைச் சோ்ந்த ஆனந்த்- சின்னத்தாய் மற்றும் லட்சுமணன்- குப்பம்மாள் தம்பதி தங்களது குழந்தைகளுடன் அனுமன் தீா்த்தத்தை அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆனந்த்தின் மகள்கள் ஜெயசித்ரா (6), ஹரிப்பிரியா (5) மற்றும் லட்சுமணனின் மகன் வசந்த் (6) ஆகிய மூவரும் வீட்டில் வைத்திருந்த கொக்கு விஷத்தை தவறுதலாக சாப்பிட்டு மயங்கி விழுந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மூன்று குழந்தைகளையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.