மார்க். கம்யூ. கட்சி சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழுக்கள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து
கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழுக்கள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பொருள்களை செவ்வாய்க்கிழமை கேரளத்துக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்செங்கோடு நகர, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில நாள்களாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நன்கொடையாக பெற்ற அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்கள், எண்ணெய், புதிய ஆடைகள், வேட்டிகள் போன்ற பொருள்களை வாகனத்தில் ஏற்றி பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு வழங்க கொண்டுசென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.