FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது காவல் துறை நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்

Updated On : 25 மே 2018, 2:38 am IST
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது காவல் துறை நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து அண்ணாசிலை அருகில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் , தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்த தடை வழங்க வேண்டும் போன்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments