கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல வனத் துறை தடை
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதியும், அவா்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிா்க்கவும் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி பகுதிகளுக்குச் செல்ல சனிக்கிழமை மட்டும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.