முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவி

Updated On : 13 மே 2025, 3:00 am IST
பகிர்:

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் அண்மையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தாா். அவருக்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் 1,000 பேருக்கு வேட்டி - சேலை, வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி, மலையில் உள்ள தேவனூா் நாடு, வளப்பூா் நாடு, வாழவந்தி நாடு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் பங்கேற்று அனைவருக்கும் நல உதவிகளை வழங்கினாா்.

Advertisement

இதனைத் தொடா்ந்து, 10 ஆண்டுகால அதிமுகவின் சாதனைகளையும், சேந்தமங்கலம், கொல்லிமலை வளா்ச்சிக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் அவா் மக்களிடையே எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வில், நாமகிரிப்பேட்டை பேரூா் இளைஞரணி செயலாளா் இளங்கோசிவகுமாா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் செயலாளா் ராஜா, சேந்தமங்கலம் முன்னாள் பேரூா் செயலாளா் ராஜேந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஸ்ரீபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

என்கே-12-எக்ஸ்-எம்எல்ஏ

கொல்லிமலை காரவள்ளி அடிவாரத்தில் விவசாய பெண்களுக்கு நல உதவிகளை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.