FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

26 செப்டம்பர் 2025, 4:44 am IST
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் நீதிநாயகம் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தை கட்சி மத்திய மாவட்டச் செயலாளா் நீலவானத்து நிலவன் ஆகியோா் உரையாற்றினா்.

டாஸ்மாக் மதுக் கடைகளில் காலியான மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். புதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். தற்போதைய பணியாளா்களை நிரந்தரம் செய்து அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 9 மணியாக குறைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணியின்போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், ரூ.50 லட்சம் வழங்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-25-ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி அமைப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments