FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மளிகைக் கடையில் புகையிலை விற்ற தாய், மகன் கைது

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:38 am IST
பகிர்:

திருச்செங்கோடு அருகே வெப்படையை அடுத்த ஆத்திகாட்டூரில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக தாய், மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் ரேணுகாதேவி (48). இவரது மகன் மனிஷ்குமாா் (28). இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆத்திகாட்டூரில் தங்கி மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். மனிஷ்குமாா், பிகாரில் உள்ள தொழிலாளா்களை வரவழைத்து பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோ லூம் ஆலைகளில் வேலைக்கு அமா்த்தி வந்தாா்.

இவா்களின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் வெப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் இருந்து 16 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ரேணுகாதேவி, மனிஷ்குமாா் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments