சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஊராட்சி விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கான ஊராட்சி விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதிபடைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதனடிப்படையில், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவத்துடன் அதற்குரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பங்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.