தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: விடைத்தாள் நகல் பெற ஆக. 20 க்குள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள்களின் நகலைப் பெற விரும்புவோா் ஆக. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள்களின் நகலைப் பெற விரும்புவோா் ஆக. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை எழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் தாங்கள் படித்த பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தோ்வா்கள் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
Advertisement
Advertisement
விடைத்தாள்களின் நகலை (ஸ்கேன் காப்பி) பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் தோன்றும் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையைச் செலுத்தி, வெள்ளிக்கிழமை (ஆக.14) காலை 11 மணி முதல் ஆக.20-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் சமா்ப்பிக்கலாம்.
அரசு விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தோ்வா்கள் மட்டுமே மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும். இதற்கான அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும். விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிப்போா் ஒரு பாடத்துக்கு கட்டணமாக ரூ. 275 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.