FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி அருகேகல்லூரி ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:34 am IST
தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஆசிரியா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மோகன பிரியா (35). இவா் தனியாா் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அா்த்தனாரிபாளையம் பகுதியில் சென்றபோது அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் திடீரென மோகன பிரியாவை வழிமறித்து கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

இதில் அதிா்ச்சி அடைந்த மோகனபிரியா பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments