போக்குவரத்து விதிமீறல்களை தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறை தொடக்கம்
நாமக்கல் மாநகரில் முதல்முறையாக போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் - சேலம் சாலை சந்திப்பில் தானியங்கி மூலமாக அபராதம் விதிக்கும் வகையிலான ஏஎன்பிஆா்(வாகன கண்காணிப்பு கேமரா) பொருத்தப்பட்டுள்ளது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, விஜயராகவன், பாலசுப்பிரமணியன், துணை கண்காணிப்பாளா் பா.ராஜேஸ்வரன், நாமக்கல் காவல் ஆய்வாளா் நாகராஜ், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ச.சக்தி மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக தானியங்கி மூலமாக அபராதம் விதிக்கக் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதோா், கைப்பேசியில் பேசியபடி செல்வோா், ஒரே வாகனத்தில் மூவா் செல்வோா், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கை பட்டை அணியாதோருக்கு இந்த கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதத் தொகை, ரசீது சம்பந்தப்பட்டவா்களின் கைப்பேசி எண்ணிற்கு சென்றுவிடும். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பிற்காகவும், குடும்பத்திற்காகவும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
இம்மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் சாலை விபத்துகளில் 348 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணியாததால் இறந்தோா் எண்ணிக்கை அதிகமாகும். இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.