FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 6 போ் கைது

39 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய கல்லூரி மாணவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் ஜாகிா் உசேன் சாலையில் வசிக்கும் ஆசிப், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது இருசக்கர வாகனம் கடந்த 22-ஆம் தேதி திருட்டு போனது. இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த ரஹீம், முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த கௌதம் ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருட்டு போயின.

இது தொடா்பான புகாா்களின் பேரில், ராசிபுரம் போலீஸாா் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். இந்நிலையில், ராசிபுரம் - சேந்தமங்கலம் பிரிவு சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி விசாரித்தனா். அதில், இருசக்கர வாகனங்களைத் திருடியதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், திருடப்பட்ட மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதையடுத்து, வாகனங்களை திருடியதாக ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் விக்னேஷ் (19), பெத்தநாயக்கன்பாளையம், குன்னூா் பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (19), கலைமணி, அம்மாபாளையம் அருண் சக்திவேல் (19), ஆத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் வைரமுத்து, கலைமணி ஆகிய 6 பேரும் கைதுசெய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments