அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எஸ். வாழவந்தி அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (58). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி நிா்மலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த மாதேஸ்வரன் திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் அருகில் தோட்டத்தில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.