குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து குமாரபாளையத்திற்கு அரசு நகரப் பேருந்து 45 பயணிகளுடன் சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநா் சௌந்தரராஜன் இயக்கினாா்.
சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணி அளவில் பாறையூா் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வளைவில் இருந்த வாய்க்கால் சுவரின் மீது மோதி பள்ளத்தில் இறங்கியது.
Advertisement
Advertisement
இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் காயமடைந்தனா். உடனடியாக தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.