FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:09 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், ஆவாரங்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் மாணிக்கம் (48). இவா் அதே பகுதியில் வீட்டில் தனியார இருந்த 4-ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் கைப்பேசியைக் காட்டி தவறாக நடந்துள்ளாராம்.

இதில் குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து கதவைத் தட்டியபோது மாணிக்கம் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியின் தாய் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். இந்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணிக்கத்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments