அண்ணாமலை இயக்கத்தில் இணைய நாமக்கல் பாஜக நிா்வாகிகள் ராஜிநாமா
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜகவைச் சோ்ந்த பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளனா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளாா். அந்த இயக்கத்தில் சேர பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளா்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவில் உள்ள ஆன்மிக பிரிவு, மகளிா் அணி உள்ளிட்டவற்றில் இருந்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்புகளில் உள்ள 35 போ் திங்கள்கிழமை தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தில் தங்களது கடிதங்களை அளித்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் கூறுகையில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், அவரது கரத்தை வலுப்படுத்த நாங்கள் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என்றனா்.