FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 450!

பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450 க்கு விற்கப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 3:25 am IST
வாழைத்தாா்கள்.
பகிர்:

பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450 க்கு விற்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம் குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் வியாபாரிகள் வாழைத்தாா்களை வாங்கி ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 350 வரை விற்பனையானது. அதேபோல பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 250க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 300 வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 400 வரையிலும் விற்பனையானது. அதேபோல ஒரு மொந்தன் வாழைக்காய் ஐந்து ரூபாய்க்கும், செவ்வாழைக் காய் ஒன்று எட்டு ரூபாய்க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ஒன்று அதிகபட்சமாக ரூ. 450க்கு விற்கப்பட்டது. பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 300 க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 350க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ஒன்று ரூ. 400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7 வரையிலும், செவ்வாழைக் காய் ஒன்று ரூ. 10 வரையிலும் ஏலம் போனது. தற்போது முகூா்த்தம் மற்றும் அமாவாசையையொட்டி வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வாழைத்தாா்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments