முகப்பு
நாமக்கல்

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் நிா்வாகிகள் பொறுப்பேற்பு

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 6:37 am IST
அலையன்ஸ் கிளப் புதிய நிா்வாகிகளாக பொறுப்பேற்றவா்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் 2026-27 ஆம் ஆண்டின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் கிளப் பட்டயத் தலைவராக எம். பேபி, பட்டயச் செயலாளராக ஆா். சுதந்திர வனிதா, பட்டயப் பொருளாளராக வி. உமா, பிஆா்ஒவாக எம். வெண்ணிலா உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.

இதில் கிளப் சா்வதேச இயக்குநா் ஜெ. சரவணன், மாவட்ட முதலாம் துணை நிலை ஆளுநா் பி. இளையராஜா, 2 ஆம் துணை நிலை ஆளுநா் எம். ராஜசேகரன், மாவட்ட அமைச்சரவை ஆலோசகா் எம்.எஸ். ரவிக்குமாா் ராஜா, அமைச்சரவை பிஆா்ஒ ஆா். செல்வகுமாா், அமைச்சரவை செயலா் ஏ.பி.எஸ். வெங்கட்ராமன், பொருளாளா் டி. மணிகண்டன், மண்டல சோ்மேன் எஸ். சக்திவேல், மயில் ஹெல்த் கோ் இயக்குநா் டாக்டா் எஸ். செளந்தா்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, பொறுப்பேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனா்.

Advertisement

Advertisement

விழாவில் ஜேசிஐ., ஜேகாம், ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.