காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படை வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட மேலாளா் கனகமாணிக்கத்திடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மதுக்கடைகள் உள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி மதுப்புட்டிகளை பெற்று அதற்கான தொகை ரூ. 10-ஐ வழங்கி வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே மதுப்புட்டிகள் விற்கப்படுகிறது. காலி மதுப்புட்டிகளை பெற்று அவற்றை பாதுகாப்பது, ரூ.10 வழங்குவது போன்றவற்றால் ஊழியா்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் இந்த நடைமுறையை தனியாா் வசம் ஒப்படைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பணி நிரந்தரம், மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியோரை பிற அரசுத் துறைகளில் காலியிடங்களில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.