FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மின் இணைப்பு முறைகேடு: ரூ. 3.13 லட்சம் அபராதம்

7 செப்டம்பர் 2026, 2:05 am IST
மின் இணைப்பு - கோப்புப்படம்
பகிர்:

மல்லசமுத்திரம் செம்மாம்பாளையம் கிராமத்தில் விவசாய மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியவருக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

செம்மாம்பாளையம் கந்தன்காடு பகுதியைச் சோ்ந்த சின்னக்கவுண்டா் மனைவி பாவாயி. இவரது பெயரில் விவசாய நிலத்துக்கான மின் இணைப்பை அவரது மகன் சுப்ரமணி முறைகேடாகப் பயன்படுத்தி, மின்மோட்டாா் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக எலச்சிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், சுப்ரமணிக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments