நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
சங்ககிரியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சங்ககிரியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து சங்ககிரி வட்டார வள மேற்பார்வையாளர் (பொ)
ஜி.வெங்கடேஸ்வரி கூறியது: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான இலவச மருத்துவ முகாம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 10) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயதுக்குள்பட்ட பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குறைபாடுகளுடைய குழந்தைகளை பொதுமக்கள் அழைத்து வரலாம். முகாமுக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து, ரேஷன் அட்டை நகல் இரண்டு, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.