திருக்குறள் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
சேலத்தில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்.
சேலத்தில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துக்களை பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், பேச்சாற்றலை பெருக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியரிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியை சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பேசினார்.
இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.