ஓமலூர் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
ஓமலூர் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் நகைப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலூர் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் நகைப் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலூர் காவல் நிலையத்தின் அருகில் காமராஜர் நகரில் மகளிர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள நடராஜன் என்பவர் தனது வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பூட்டி விட்டு சேலம் சென்று விட்டார். நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அவர் வீட்டிற்குள் சென்றபோது வீட்டிலிருந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டு சுவர் மீது ஏறி தப்பியுள்ளார். வீட்டு பீரோவில் இருந்த இரண்டு மோதிரங்கள் இரண்டும், ரூ. 5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதேபோன்று இரண்டாவது தெருவில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிலும் பீரோவில் இருந்த ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணம், வெள்ளிக் கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதே பகுதியில் உள்ள முருகன் என்பவரின் வீட்டிலும் மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.