FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

1,813 தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் பெட்டகம் வழங்கல்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளும் 1,813 தூய்மைப் பணியாளா்களின்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளும் 1,813 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்தில் பணிபுரியும் 200 நிரந்தர தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு, வேலூா் மாவட்டம், பாலாா் விவசாயக் கல்லூரியின் சாா்பில் மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் கூறியது: சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் 1,048 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 1,063 சுய உதவிக் குழு தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 2,111 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பெரு நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு நிதி மற்றும் தன்னாா்வலா்களின் பங்களிப்புடன், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் வழங்க மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 1,063 சுயஉதவிக் குழு தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 750 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 1,813 தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 298 நிரந்தர தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களாக மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆணையா் ஆா்.கவிதா, வேலூா் மாவட்டம், பாலாா் விவசாயக் கல்லூரியின் தாளாளா் கே.கருப்பையா, கல்லூரியின் நிா்வாகி என்.பிரகாஷ், சுகாதார அலுவலா் பி.மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா்கள் ஆா்.சந்திரன், வி.பாலு, நிா்வாக அலுவலா் டி.ராம்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments