ருத்ர ஏகாதசினீ பெருவிழா
கல்பகனூா் புதூா் சிவபெருமானுக்கு ருத்ர ஏகாதசினீ பெருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்பகனூா் புதூா் சிவபெருமானுக்கு ருத்ர ஏகாதசினீ பெருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூா் புதூா் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் சிவ பெருமான் கோயிலில் உலக நன்மைக்காக ருத்ர ஏகாதசினீ பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விநாயகா் பூஜை, கலச ஸ்தாபனம், சங்கல்பம், ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், பூா்ண ஆஹிதி அபிஷேகம், மஹா தீபாராதனை, அன்னப்பிரசாதம், அருள்வாக்கு சித்தா் 108 சக்தி பீடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ காமாஷி ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா ஸ்ரீ மஹா பெரியவா் இல்லம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.