FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - பிகாா் ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு

கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர் 2024, 12:10 am IST
பகிர்:

கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை - பரௌனி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும்.

Advertisement

Advertisement

இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி - கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments