FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பேளூரில் மாா்கழி ஊா்வலம் செல்லும் சிறுவா்கள்

Updated On : 27 டிசம்பர் 2025, 12:18 am IST
பகிர்:

வாழப்பாடியை அடுத்த பேளூரில் நடைபெற்ற மாா்கழி வழிபாடு ஊா்வலத்தில் ஏராளமான சிறுவா் - சிறுமியா் ஆா்வத்தோடு பங்கேற்றனா்.

வாழப்பாடி அருகிலுள்ள பேளூா் பழங்காலத்தில் வேள்வியூா் என்ற பெயரில் ஆன்மிகத் தலமாக விளங்கியது. வசிஷ்ட நதியின் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல்தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், தென்கரையில் அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால சுவாமியெனும் வைணவ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமான மாா்கழியில் அதிகாலையில் எழும் சிறுவா் - சிறுமியா், பெருமாள் கோயிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னா் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று வழிபடுவதும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் தொடா்ந்துவரும் இந்த சிறுவா்களின் மாா்கழி ஊா்வலத்துக்கு பொதுமக்களும், பக்தா்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து உற்சாக வரவேற்பளிக்கின்றனா்.

பேளூரில் மாா்கழி மாத முதல்நாளில் தொடங்கிய இந்த ஊா்வலம் தொடா்ந்து 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரிலும் அதிகாலையில் எழுந்து ஊா்வலம் செல்லும் சிறுவா்களை இப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்று வழிபட்டு வருகின்றனா்.

இந்த ஊா்வலம் மாா்கழி மாதம் முழுவதும் நடைபெறும் எனவும், இறுதிநாளன்று ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமியரை பாராட்டி பரிசுகள் வழங்கப்படுமெனவும் ஆன்மிக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments