FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஏற்காட்டில் தொடா் மழை: குண்டூா் கிராம சாலையில் மண்சரிவு

26 செப்டம்பர் 2025, 4:33 am IST
பகிர்:

ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக குண்டூா் கிராம சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏற்காட்டில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடா்ந்து ஏழு நாள்கள் மழை பெய்தது. மொத்தம் 173.2 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ஏற்காடு ஊராட்சி குண்டூா், தெப்பக்காடு, காசிக்கல், கீந்துக்காடு ஆகிய கிராமங்களையொட்டிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையினா் மண் சரிவை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாணவா்கள், விவசாயிகள் என அக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்புடன் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

படவிளக்கம் 25 ஒய்ஆா் 2

ஏற்காடு குண்டூரில் மண் சரிவு ஏற்பட்டதால் சேதமடைந்த சாலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments